தென்னை மரத்தில் இளைஞர்கள் ஏறி சாகசத்தில் ஈடுபடும் போது தென்னை மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக நான்கு பேர் ஆற்றில் விழுந்து உயிர் தப்பினர்.
கேரள மாநிலம் மலப்புரம் அருகே காளிகாவு பகுதியில் ஆற்றில் சாய்ந்து நிற்கும்
தென்னை மரம் ஒன்றில் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஏறி ஆற்றில் குதித்து
சாகசத்தில் ஈடுபடும் நிகழ்வு அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
ചാടാൻ ഒരുങ്ങി തെങ്ങിന് മീതെ നിന്ന യുവാക്കൾക്ക് മുൻപെ തെങ്ങ് പുഴയിലേക്ക് വീണു. 4 യുവാക്കൾ ഭാഗ്യംകൊണ്ട് പരുക്കേൽക്കാതെ രക്ഷപ്പെട്ടു. മലപ്പുറം കാളികാവ് ഉദിരംപൊയിലിൽ കെട്ടുങ്ങൽ ചിറയിലാണ് സംഭവം #malappuram #viralvideo pic.twitter.com/H07sKA0neN
— Manorama News (@manoramanews) July 23, 2023
இந்நிலையில் நேற்று நான்கு இளைஞர்கள் தென்னை மரத்தில் ஏறி குதித்து சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென மரம் முறிந்து விழுந்து நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக ஆற்றில் விழுந்து உயிர் தப்பினர். இந்நிலையில் தற்போது விபத்து காட்சிகள் வைரலாகி வருகின்றன.







