அந்தியூர் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாததால் மனமுடைந்த இளைஞர் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்
கொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூரை சேர்ந்த மயில்சாமி தனது உறவுப் பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு இருதரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்திருந்துள்ளனர். திருமணத்திற்கு ஜாதகம் பார்த்தபோது, பொருத்தம் சரியில்லை என ஜோதிடர் கூறியதாக தெரிகிறது. இதனால், இந்த திருமணத்திற்கு பெற்றோர் தடை விதித்ததாகக் கூறப்படுகிறது. திருமணம் நடைபெறாததால், மனமுடைந்த மயில்சாமி, வீட்டின் அருகே உள்ள 90 அடி ஆழ கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்
கொண்டுள்ளார். இதையடுத்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்தியூர் தீயணைப்பு குழுவினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளைஞரின் உடலில் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் உயிரிழப்பு
குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







