விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது.
மறைந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படம் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என நடிகர் விஜய் சேதுபதி அதிகாரபூர்வமாக தனது டிவிட்டர் பகத்தில் பதிவிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விஜய் சேதுபதியுடன் இயக்குநர்கள் மோகன் ராஜா, மகிழ் திருமேனி, கரு.பழனியப்பன் நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா மற்றும் விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. படத்தில் விஜய் சேதுபதி வெளிநாடு வாழ் தமிழராக நடித்துள்ளார். சர்வதேச பிரச்னைக் குறித்து படம் பேசப்போகிறது என்று சொல்லப்படுகிறது.