கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிழற்கூடம்!

உலக அளவில் முதன் முறையாக சூரிய ஒளி மின் வசதி மூலம் செயல்படும், நவீன வசதிகளுடன் கூடிய குளிர்சாதன இரண்டடுக்கு பேருந்து நிழற்கூடம் – கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தருமபுரியில் திறக்கப்பட்டது. தருமபுரி…

உலக அளவில் முதன் முறையாக சூரிய ஒளி மின் வசதி மூலம் செயல்படும், நவீன வசதிகளுடன் கூடிய குளிர்சாதன இரண்டடுக்கு பேருந்து நிழற்கூடம் – கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தருமபுரியில் திறக்கப்பட்டது.

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.58 லட்சத்தில் கட்டப்பட்ட உலகின் முதல் சூரிய ஒளி மின்சக்தி மூலம் செயல்படும், நவீன வசதிகளுடன் கூடிய குளிர்சாதன இரண்டடுக்கு பேருந்து நிழற்கூடத்தை செந்தில் குமார்  எம்பி முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் சாந்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிழற்கூடத்தில் குளிர்சாதன வசதியுடன் பயணிகளுக்கு இரண்டடுக்கு தளத்தில் இருக்கை வசதி, தானியங்கி பரிவர்த்தனை எந்திரம், ஏடிஎம் மையம், சிறப்பு அங்காடி, தானியங்கி சூரிய மின் சக்தி நிலையம், 24 மணி நேர கண்காணிப்பு கேமரா வசதி, 24 மணி நேரமும் இலவச வைஃபை வசதியும் உள்ளது.

மேலும், அதிநவீன வர்த்தக விளம்பர எல்இடி பலகை, குளிர்சாதன பாதுகாக்கப்பட்ட
தாய் சேய் பாலூட்டுஅறை, மினி நூலக வசதி, அரசின் ஈராண்டு சாதனைகள் குறித்த
வாசகங்கள், தருமபுரி பண்பலை வானொலியை கேட்கும் வசதி, தொலைக்காட்சி
பெட்டி, செல்பி பாயிண்ட். கார்டன் சீட் அவுட் மற்றும் செல் சார்ஜிங் பாயிண்ட் இவை
அனைத்தும், அதிநவீன நிழற்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.