செஸ் உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதி போட்டியின் முதல்சுற்றில் இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா அமெரிக்காவின் கருணா இடையேயான ஆட்டம் சமனில் முடிந்தது.
அஜர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதி போட்டியின் முதலம் சுற்றில், இந்தியாவின் அபிரக்ஞானந்தா, அமெரிக்காவின் கருணா இடையேயான போட்டி சமனில் முடிந்தது.
இதனையடுத்து இன்று இரண்டாவது சுற்றில் விளையாடவுள்ளார். மற்றொரு அரையிறுதிப்போட்டியின் முதல் சுற்றில், உலகின் முதல் நிலை வீரர் மேக்னஸ் கார்ல்சன், சொந்த மண்ணில் விளையாடும் நிஜட் அபாசோ இடையேயான போட்டியில் கார்ல்சன் வெற்றி பெற்றார். தொடர்ந்து இன்று 2-வது சுற்று போட்டி நடைபெறவுள்ளது.







