2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி அடித்த சிக்சர் விழுந்த இடத்தை நினைவிடமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று கொடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை கவுரவிக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில், உலகக் கோப்பை 2011 தொடரின் இறுதிப் போட்டியில், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் ’வின்னிங் ஷாட்’ சிக்சரை கவுரவிக்கும் விதத்தில், அந்த சிக்சர் விழுந்த இருக்கைகளை நினைவிடமாக மாற்றவும் திட்டமிட்டுள்ளது. தோனியின் சிக்சர் விழுந்த குறிப்பிட்ட இடத்தை ஒட்டியுள்ள, 4 அல்லது 5 இருக்கைகளை அதன் நினைவிடமாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெறும் போது, அந்த நினைவிடம் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, வரும் சனிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடும் ஐபிஎல் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த போட்டியின் போது, மகேந்திர சிங் தோனியை கவுரவிக்கவும், பாராட்டி விழா நடத்தவும் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : ”தோனி அடிச்ச 2 சிக்ஸ் தான் ஜெயிச்சதுக்கு காரணம்….” – சிஎஸ்கே வெற்றி குறித்து ரசிகர்கள் பேட்டி
கிரிக்கெட் வரலாற்றில், ஒருவரின் சிக்சரை நினைவுகோரும் விதத்தில் நினைவிடம் அமைப்பது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட்டில், அம்மாநில கிரிக்கெட் மைதானத்தில் தோனியின் பெயரில் ஒரு பெவிலியன் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.







