மகளிர் பிரீமியர் லீக் | மும்பையை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி!

மும்பையை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 4-வது சீசன் நேற்று (ஜன.9) நவி மும்பையில் தொடங்கியது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.

மும்மை அணியின் சார்பில் அதிகபட்சமாக சஜீவன் சஜனா 45 ரன்கள் எடுத்தார். நிகோலா கேரி 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பெங்களூரு அணி சார்பில் நடின் டி கிளார்க் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.

பெங்களூரு அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சியளித்தனர். ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் நடின் டி கிளார்க் தனி ஆளாக போராடி அரை சதம் கடந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நடின் டி கிளார்க் 63 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.