விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
சிவகங்கையில் மகளிர் குழுக்கள் மத்தியில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன், பெண்களுக்கு அனைத்துத் துறையிலும் சம பங்கு உள்ளதாக கூறினார். ஆண்களை விட அதிக நேரம் வீட்டில் உழைக்கும் பெண்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைத் தொடர்ந்து தனது சொந்த ஊரான பரமகுடியில் அவர் பரப்புரை மேற்கொண்டார். தான் நட்சத்திரமாக இருக்க விரும்பவில்லை என தெரிவித்த கமல்ஹாசன், அனைவரின் வீட்டிலும் குத்துவிளக்காக இருக்க விரும்புகிறேன் என கூறினார். மேலும் ஏழ்மையை பயன்படுத்தி சிலர் ஓட்டு வாங்குகிறார்கள் என்றும் அதனை மாற்ற வேண்டும் என குறிப்பிட்டார்.