29.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்படுமா?-அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்படுமா? என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் DPI வளாகத்தில் 61 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பதவி உயர்வு ஆணையை வழங்கிய பின் பேட்டி அவர் அளித்த பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மழைக்காலத்துக்கு முன்னரே இடியும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டடங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள கோப்புகள், வருகைப் பதிவேடு விவரங்கள் போன்றவற்றை உயரமான, பாதுகாப்பான இடங்களில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பள்ளிகள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சாதனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

LKG, UKG தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை – நிதித்துறை இடையே அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை இன்று நடைபெறுகிறது. அதிகாரிகளுடனான கூட்டத்துக்குப் பின் நிதியமைச்சருடன் நான் ஆலோசிக்க உள்ளேன்.

அப்போது ஆசிரியர்களின் கோரிக்கைகள் உட்பட அனைத்தையும் விவாதித்து முடிவு எடுக்க உள்ளோம். தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தலாமா என்பதை நிதிநிலையைப் பொறுத்து முதலமைச்சரின் அலுவலகம் தான் முடிவு செய்யும்.

244/77 என்ற புதிய திட்டத்தின் தொடக்கமாக இன்று சேப்பாக்கம் தொகுதியில் உள்ள பள்ளியை ஆய்வு செய்தேன். தொடர்ந்து மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சென்று 77 வகையான திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய உள்ளேன். CBSE, ICSE பள்ளிகளையும் ஆய்வு செய்ய உள்ளேன்.

மாநிலம் முழுவதும் உள்ள 58,000 பள்ளிகளையும் ஆய்வு செய்ய நேரமிருப்பின் ஆய்வு மேற்கொள்வேன். கல்வித் துறை அதிகாரிகளை ஊக்கப்படுத்த, நானே முதல் ஆளாக களத்தில் இறங்குகிறேன்.

கோவையில் உள்ள பள்ளியை சுத்தம் செய்ய வந்த RSS குழுவினர், அங்கு உறுதிமொழி எடுத்துச் சென்றுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாது என்று கோவை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட CEO-வும் உறுதியளித்துள்ளனர்.

பள்ளிகளில் எந்த ஒரு கருத்தியலும் நுழையக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. கல்வித் தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்கும் ஒப்பந்தப்புள்ளியில் முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகள், கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்த பின் அதிலுள்ள பிரச்னைகள், அதற்கான தீர்வு, தேவைப்படும் நிதியுதவி போன்றவை குறித்து முதலமைச்சரிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளேன்.

இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களின் செயல்பாடுகள் பிரமிப்பை ஏற்படுத்துவதால், அவர்களே LKG, UKG வகுப்புகளுக்கு பாடம் எடுக்க பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading