இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் தொடங்கியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. நான்கு போட்டிகள் முடிவு பெற்றிருந்த நிலையில், கடைசி போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு, 9 மாதங்களுக்கு பிறகு தற்போது தொடங்கியுள்ளது. 9 மாத இடைவெளியில் இரு அணிகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக இரு அணிகளுக்கும் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் கேப்டனாக இருந்த நிலையில் தற்போது பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகியுள்ளார். அதேபோல் இந்திய அணியிலும் விராட் கோலி பதவி விலகியதை அடைத்து ரோஹித் சர்மா முழு நேர டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘’5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’ – வானிலை ஆய்வு மையம்
இந்நிலையில் கேப்டன் ரோஹித் ஷர்மாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், இந்திய பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் கபில் தேவிற்கு பிறகு வேகப் பந்துவீச்சாளர் ஒருவர் இந்திய அணியின் கேப்டனாகியுள்ளார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ள சுழலில் இந்த போட்டியை இந்திய அணி சமன் செய்தாலே தொடரை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் தொடரை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.
சமீபத்தில் நியூஸிலாந்திற்கு எதிரான தொடரை 3 – 0 என வென்று உற்சாகத்துடன் உள்ள இங்கிலாந்து அணியின் வியூகம் முற்றிலும் புதியதாக உள்ளது. வழக்கமான டெஸ்ட் யுக்திகளில் இருந்து சற்று மாறுபட்டு அட்டாக்கிங் மோடில் இருக்கும் இங்கிலாந்து அணியை சமாளித்து இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
– சந்தோஷ், நியூஸ் 7 தமிழ்