அமெரிக்கா அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி – டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவுக்கான அதிபர் தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறும் நிலையில், தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்று முன்னாள் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.   அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று…

அமெரிக்காவுக்கான அதிபர் தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறும் நிலையில், தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்று முன்னாள் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

 

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராகினார். பின்னர் 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்ததால், ஜோ பைடன் வெற்றி பெற்று தற்போது அதிபராக உள்ளார். இந்நிலையில், டிரம்ப் 2024-ம் ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வ அறிப்பு வெளியாகியுள்ளது.

ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் டிரம்ப், அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாகவும், புகழ் பெற்றதாகவும் மாற்றுவதற்கு அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிகள் சபை, செனட் சபை தேர்தல் முடிவுகள் ஆளும் ஜனநாயக கட்சிக்கே சாதகமாக வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டை மீண்டும் ‘அமெரிக்கா பர்ஸ்ட்’ என்ற முதன்மையான பாதையில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தேர்தலை சந்திக்க உள்ளதாக டிரம்ப் கூறியிருப்பது, அவரது ஆதரவாளர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனது நோக்கம் குறித்து எந்த கேள்வியும் தேவையில்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.