32.5 C
Chennai
June 1, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

ஆடை கலாச்சாரம் பற்றி ஏன் பேசினேன்? – நடிகர் சதீஷ் விளக்கம்

‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பெண்களின் ஆடை குறித்து நடிகர் சதீஷ் பேசியதற்கு கண்டனம் எழுந்த நிலையில், அது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

 

யுவன் இயக்கத்தில் சன்னி லியோன், சதீஷ், தர்ஷா குப்தா, ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ’ஓ மை கோஸ்ட்’. சென்னையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இவ்விழாவில் சன்னி லியோன், சதீஷ் உட்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் சதீஷ், பாம்பேயிலிருந்து வந்திருந்த சன்னி லியோன் நமது கலாச்சாரப்படி சேலை அணிந்து வந்துள்ளார். ஆனால் கோயம்புத்தூர் பெண்ணான தர்ஷா குப்தா எப்படி உடை அணிந்து வந்துள்ளார் என்று கிண்டல் செய்து பேசினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நடிகர் சதீஷின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். பாடகி சின்மயி, இயக்குநர் நவீன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வெளியிட்டிருந்த பதிவில், உடை எப்படி உடுத்துவது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்று கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் வலைத்தளங்களில் நடிகர் சதீஷ்-க்கு எதிராக பலர் குரல் கொடுக்க தொடங்கினர்.

இந்நிலையில், இந்த சம்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயலாக நடிகர் சதீஷ் விளக்கமளித்து ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், தானும், தர்ஷா குப்தாவும் நண்பர்கள் என்றும், நிகழ்ச்சியில் அருகருகே அமர்ந்திருந்தோம் என்றும் கூறியுள்ளார். அப்போது, தர்ஷா குப்தா தன்னிடம் சன்னிலியோன் நிகழ்ச்சிக்கு வருவதாகவும், அவரை விட தான் ஸ்டைலாக உடை அணிந்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், சன்னிலியோன் பட்டு புடவையில் வந்ததால், தர்ஷா குப்தா அப்சட்டானதாக அவர் தன்னிடம் கூறினார்.

தான் அப்சட்டானதை நீங்கள் மேடையில் கூட பேசலாம் என அவர் தன்னிடம் தெரிவித்தார் என நடிகர் சதீஷ் விளக்கமளித்துள்ளார். அதனால்தான்  உடை பற்றி பேசியதாக கூறியுள்ளார். மேலும் ஆடை கலாச்சாரத்தில் ஆண், பெண் இருவருக்கும் அவரவர் விருப்பம் என்பதில் தனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் படத்தின் ப்ரெமோசனுக்காக இயக்குநர் நவீன் மற்றும் பாடகி சின்மயி ஆகியோரை தான்  பணம் கொடுத்து இதுபோன்ற கருத்துக்களை பதிவிட சொன்னதாகவும் இணையதளங்களில் செய்தி பரவி வருவதாக தெரிவித்த நடிகர் சதீஷ் அது பொய்யான தகவல் என்றார்.

ஆடை கலாச்சாரம் குறித்து பேசியவர்கள் அவர்கள் தனிப்பட்ட கருத்துக்களைதான் பதிவிட்டுள்ளனர். மேலும் தான் பல நிகழ்ச்சிகளில் நல்ல விஷயங்களையும் பேசியுள்ளேன். புகைப்பிடிப்பது, மது அருந்துவது கூடாது என்றும் பேசியுள்ளேன். ஆடை குறித்து பேசியதை இணையதளங்களில் பரப்பியது போன்று, தான் பேசிய நல்ல விஷயங்களையும் பரப்புங்கள் அதனை ரசிகர்கள் கடைபிடியுங்கள் என்றும் நடிகர் சதீஷ் அந்த வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading