பிசிசிஐ தேர்வுக் குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா ராஜிநாமா செய்ததை அடுத்து புதிய தேர்வு குழு தலைவர் யார் என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா கூறிய கருத்து சர்ச்சையானதை அடுத்து அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார். தனியார் செய்தி தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆப்ரேசனில், இந்திய வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தி விளையாடுவார்கள் என சேத்தன் சர்மா கருத்து தெரிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு வந்ததையடுத்து தமது பதவியை ராஜிநாமா செய்வதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிற்கு கடிதம் அனுப்பினார். கடிதத்தை பெற்றுக்கொண்ட பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அவரது ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டார்.இந்த நிலையில், தற்போது புதிய தேர்வுக்குழு தலைவராக நியமிக்க, அக்குழுவில் உள்ள வீரர்களுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ள நிலையில், சலில் அங்கோலா அல்லது சிவ சுந்தர் ஆகியோருக்கு பொறுப்பு வழங்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய தேர்வு குழு உறுப்பினர்களாக சுப்ரதோ பானர்ஜி, சலில் அங்கோலா, ஸ்ரீதரன் ஷரத் மற்றும் சிவசுந்தர் தாஸ் ஆகியோர் உள்ளனர். சேத்தன் சர்மா இன்று காலை ராஜிநாமா செய்தார்.