ITI-க்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?.. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர்வதற்கான விண்ணப்பத் தேதியை  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.  இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது; தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி…

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர்வதற்கான விண்ணப்பத் தேதியை  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது;

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2024-2025-ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு  மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அதற்கான கடைசி தேதி 07.06.2024.

இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள்,  தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 136 உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.  இம்மையங்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி விவரம் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைகான விண்ணப்பித்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்பட்டால் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரியிலும்,  அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சல் முகவரி : itiadmission2024@gmail.com
அலைபேசி எண் மற்றும் : 9499055689

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.