மிலாது நபி விடுமுறை எப்போது? புதுச்சேரி அரசு முக்கிய அறிவிப்பு…

புதுச்சேரியில் வரும் 28 ம் தேதி மிலாது நபி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.  நபிகள் நாயகத்திற்காகவும் அவரின் போதனைகளுக்காகவும் கொண்டாடப்படும் நாள் தான் மிலாது நபி. இது நபியின் நினைவு தினம் ஆகவும் கொண்டாடப்படுகிறது.…

புதுச்சேரியில் வரும் 28 ம் தேதி மிலாது நபி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நபிகள் நாயகத்திற்காகவும் அவரின் போதனைகளுக்காகவும் கொண்டாடப்படும் நாள் தான் மிலாது நபி. இது நபியின் நினைவு தினம் ஆகவும் கொண்டாடப்படுகிறது. இது தொடக்க காலத்தில் எகிப்தில் அதிகாரப்பூர்வ விழாவாகக் கொண்டாடப்பட்டு பின்னர், 11 ஆம் நூற்றாண்டில் பிரபலமானது.

அன்றைய காலகட்டங்களில், ஷியா முஸ்லிம்களின் அப்போதைய ஆளும் பழங்குடியினர் மட்டும் தான் இந்த பண்டிகையைக் கொண்டாட முடியும், பொது மக்கள் அல்ல. 12-ம் நூற்றாண்டில் மட்டுமே சிரியா, மொராக்கோ, துருக்கி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்த பண்டிகையை கொண்டாடத் தொடங்கினர். பின்னர் சில சன்னி முஸ்லீம் பிரிவுகள் இந்த நாளைக் கொண்டாடத் தொடங்கினர்.

அந்த வகையில் தான் தமிழகத்தில் மிலாது நபி வரும் 28 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. புதுச்சேரியிலும் மிலாது நபி செப்.28-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, அன்றைய தினமே அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே செப்.27-ல் அரசு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது செப்.28-க்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.