ராஜ ராஜ சோழன் இந்துவா? முஸ்லிமா? எதற்கு இதெல்லாம், படத்தை எடுத்தோமா, சம்பாரிச்சமா என்று இருக்கணும் என ஓங்காரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கஞ்சா கருப்பு பேசினார்.
ஓங்காரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் மோகன் ஜி, நடிகர் கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியின் போது பேசிய நடிகர் கஞ்சா கருப்பு, “ஒரு நாள் தயாரிப்பாளராக இருந்து பாருங்கள், அப்போது தெரியும் அதன் கஷ்டம். நான் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து தோல்வியடைந்த போது, எனது அம்மாவிடம் தெரிவித்தேன். அவர் சொன்னார், நீ காசு கொடுத்து படிக்காத படிப்பை, சினிமாவில் நீ காசை கொடுத்து படித்துள்ளாய்.
இன்று பிரச்சினை செய்கிறார்கள் ராஜ ராஜ சோழன் இந்துவா முஸ்லிமா என்று. எதற்கு இதெல்லாம், படத்தை எடுத்தோமா, சம்பாரிச்சமா என்று இருக்கணும். அதெல்லாம் தேவை இல்லாத விஷயம் என்று கஞ்சா கருப்பு குறிப்பிட்டார்.
வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்தும் இயக்குநர் நடிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். நம்ம ஊரில் இருக்கும் ஊர்கள் எல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? அவர்கள் ஊரில் பள்ளிக்கூடம் கட்டினால் நம்ம பிள்ளைகளுக்கு இலவசமாக விடுவார்களா? அதனால் அயல்நாட்டில் பணத்தைப் போடாதீர்கள்” என்றார். தொடர்ந்து பேசிய நடிகர் கஞ்சா கருப்பு, படத்தில் நடித்த நடிகை இசை வெளியீட்டு விழாவிற்கு வருவதற்கு 1 லட்சம் ரூபாய் பணம் கேட்டதற்கு ஆபாசமாகத் திட்டி கடிந்துகொண்டார்.