பெங்களூருவில் நடைபெற்ற எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் அதிருப்தி ஏற்பட்டதாக வெளியான செய்தியை பீகாா் முதலமைச்சர் நிதிஷ்குமாா் மறுத்துள்ளாா்.
நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், திமுக உட்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. எதிா்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை நிதிஷ் குமாா், பாட்னாவில் நடத்திய நிலையில், இரண்டாவது கூட்டம் காங்கிரஸ் சாா்பில் பெங்களுருவில் நடத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜூலை 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை பங்கேற்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் என 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் தேசிய அளவில் பொது வேட்பாளரை நிறுத்துவது, அந்தந்த மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள மாநில கட்சிகளின் ஆதரவுடன் பாஜக. வேட்பாளருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு I.N.D.I.A. என பெயரிட்டனர்.
இதனையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், நிதிஷ் குமாா் மட்டும் செய்தியாளா்கள் சந்திப்பை தவிா்த்துவிட்டாா். இது தொடா்பாக கருத்து தெரிவித்த பீகாா் முன்னாள் துணை முதலமைச்ச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் மோடி, ‘பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் நிதிஷ்குமாருக்கு அதிருப்தி ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனவே தான் அவா் செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்காமல் பாட்னாவுக்கு திரும்பிவிட்டாா். முக்கியமாக அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தன்னை அறிவிப்பார்கள் என்று நிதிஷ் குமாா் எதிா்பாா்த்தாா். ஆனால், அது நடக்காததால் அவா் விரக்தியடைந்தாா்’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நிதிஷ்குமார் செய்தியாளா்களை நேற்று சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் பாஜக மூத்த தலைவரான சுஷில்மோடியின் பேச்சு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், பெங்களூரு கூட்டம் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. சுஷில்மோடியின் பேச்சை யாரும் பொருட்படுத்த வேண்டாம். கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் எடுக்கப்பட்ட முடிவுகளை மகிழ்ச்சியுடன் வரவேற்றோம். பாட்னாவுக்கு உடனடியாகத் திரும்ப வேண்டி இருந்ததால் பெங்களூருவில் செய்தியாளா்கள் சந்திப்பை தவிா்த்துவிட்டேன். 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது தான் எனது முக்கிய நோக்கம். இப்போது அது செயல் வடிவம் பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா