29.5 C
Chennai
April 27, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

நாட்டிற்கான தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டிற்கான தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாத்தின்போது பேசிய அவர், இந்திய வேளாண்மையை மேம்படுத்த மற்றும் நவீனப்படுத்த ஒரு திறன்வாய்ந்த உபகரணமான டிரோன்கள் கொண்டு வரப்படும் எனக்கூறினார். இந்த டிரோன்களை கொண்டு உரங்கள், பூச்சி கொல்லிகள் ஆகியவற்றை திறம்பட பயன்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், ஒரு நல்ல தொழில்நுட்பம் சார்ந்த வகையில், பயிரின் அடர்த்தியையும் டிரோன்களை கொண்டு பகுப்பாய்வு செய்ய முடியும் என குறிப்பிட்டார். 100-வது ஆண்டு சுதந்திர தினம் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது என்றும், அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை பற்றிய தொலைநோக்கு இல்லை என்றால், அது காங்கிரஸ் ஆட்சியின் 65 ஆண்டுகள் பின்நோக்கி சென்றுவிடும் என தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை பள்ளிகளுக்கு அணிந்து வரக்கூடாது: கர்நாடக முதலமைச்சர்

இந்திய சுதந்திரமடைந்த 65 ஆண்டுகளில் ஒரு குடும்பம் மட்டுமே மொத்த பலனையும் அனுபவித்ததாக அவர் சாடினார். எனவே, பொருளாதார ஸ்திரதன்மை மற்றும் நாட்டிற்கான தொலைநோக்கு பார்வை பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading