குழுவினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து மருத்துவக்
குழுவினர், மயங்கி கிடந்த நடிகர் விஷாலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இதன் காரணமாக சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு மயக்கம் தெளிந்து நடிகர் விஷால் எழுந்தார்.
இதனையடுத்து மிகவும் சோர்வுடன் காணப்பட்ட நடிகர் விஷாலை அவருடன் வந்திருந்தவர்கள் கைத்தாங்களாக பிடித்து அழைத்து சென்று காரில் ஏற்றி சென்னைக்கு அழைத்து சென்றனர். நடிகர் விஷால், திடீரென விழா மேடையிலேயே மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில்,“நடிகர் விஷால் நன்றாக இருக்கிறார். சரியாக சாப்பிடாதது, கூட்டம் காரணமாக மயக்கம் ஏற்பட்டது. டாக்டரிம் செக் செய்து விட்டோம்.
இப்போது விஷால் நன்றாக இருக்கிறார்” என நடிகர் விஷாலின் மேனேஜர் ஹரி கிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.







