தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை – மருத்துவமனை அறிக்கை!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீராக இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று…

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீராக இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.  அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு  வருகிறார்.

கடந்த 18-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு சென்னை நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,  தற்போது உடல்நிலை சீராக இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.  எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால்,  அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.  அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம்.  அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது .

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.