முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய விஜயகாந்த்

சென்னையில் பெய்த கனமழையால் தேங்கி மழைநீரை துரித நடவடிக்கையின் மூலம் அகற்றிய தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். 

வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தமிழகத்தில் தொடங்கியது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் பெய்த கனமழையால் திரு.வி.க.நகர், ராயபுரம் பகுதிகள் மற்றும் கணேசபுரம், மாணிக்கம் நகர், ரங்கராஜபுரம் பகுதிகளில் உள்ள சுரங்கபாதைகளில் தேங்கிய மழைநீர் தேங்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து சென்னை மாநகராட்சி ராட்சத மின்மோட்டார்கள் கொண்டு மழைநீர் தேங்கிய பகுதிகளில் மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்தது. அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர், ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீரை மின்மோட்டர்கள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

தமிழக அரசின் இந்த செயலை தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, தி.நகர், வியாசர்பாடி, பெரம்பூர், கொளத்தூர் மற்றும் சுரங்கப்பாதைகள், சாலைகள், நெடுஞ்சாலைகள், தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை உடனடியாக ராட்சத இயந்திரங்களை கொண்டு அகற்றிய தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

எதிர்க்கட்சிகள் சுட்டிகாட்டிய உடனே தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு மக்கள் பாதிக்கப்படாதவாறு மழைநீரை உடனடியாக அகற்றி உள்ளது. சென்னை மாநகராட்சியை சகஜ நிலைக்கு திரும்பிக் கொண்டு வந்த தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் எனது பாராடுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram