வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 56 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் ஹனோய் நகரில் உள்ள 9 அடுக்கு கட்டட குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது வீடுகளில் இருந்த பெரும்பாலானவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 56 பேர் மருத்துவமனையில் பலியாகினர். 37 பேருக்கு தீவிர சிகிசை அளிக்கப்பட்டு வருகிறது.
தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பு குறுகலான பகுதியில் உள்ளதால் தீயணைப்பு வண்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தீயணைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.