31.3 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி தியாகராயரின் 172-வது பிறந்தநாள்: அரசு சார்பில் மரியாதை

வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி தியாகராயரின் 172-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நீதிக்கட்சி நிறுவனர்களில் முக்கியமானவரும், சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கியவருமான பி.தியாகராயர் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் சர். பிட்டி. தியாகராயர், சென்னை கொருக்குப் பேட்டையில் வாழ்ந்த அய்யப்பச் செட்டியார்-வள்ளியம்மாள் தம்பதியினருக்கு மகனாக, 1852 ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி பிறந்தார். வணிகத் தொழிலில் செல்வாக்கு மிக்க செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த தியாகராயர், சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் தனது தந்தை நடத்திய நெசவு, தோல் பதனிடுதல், உப்பளம், சுண்ணாம்புக் காளவாய் ஆகிய தொழில்களை கவனித்து வந்தவர், வணிகம் மூலம் ஈட்டிய பொருளைத் தேவைப்படும் ஏழை எளியோர்க்கு, ஊருணி போலவும், பழுமரம் போலவும் வாரி வழங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

1876 ஆம் ஆண்டு கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்போது வள்ளலாரை போன்று தியாகராயரும், அனைவருக்கும் உணவு வழங்கினார்.வர்த்தகத்திலும், சிறுதொழில் வளர்ச்சி யிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண் டார். அவர் தன் முன்னோரின் பரம்பரைத் தொழிலான கைத்தறி நெசவில் முழுக் கவனம் செலுத்தி, பிட்டி என்ற பெரிய நெசவாலையைத் தொடங்கிப் பலருக்கும் வேலை வாய்ப்பினை உருவாக்கியதோடு, கைத்தறியில் பல புதுமைகளைப் புகுத்தினார்.

இது தவிர திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக கருதப்படும் தியாகராயர், நீதிக்கட்சி என்ற அமைப்பை தொடங்கி,1921-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநில சட்டப்பேரவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வர் பதவி இவரைத் தேடி வந்தாலும் அதை மறுத்து வேறு ஒருவரை பொறுப்பேற்கச் செய்தார்.

இப்படி பல சிறப்புகளை கொண்ட சர். பிட்டி. தியாகராயர் அவர்களின் 172ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருஉருவப்படத்திற்கு, செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading