வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 15 கவுன்சிலர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 33 பேரூராட்சிகளுக்கும் கடந்த மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. கடந்த 4ம் தேதி மறைமுக தேர்தல் அடிப்படையில் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வெள்ளலூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 வார்டுகளில் அதிமுகவும், 7 வார்டுகளில் திமுகவும் வெற்றி பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக தேர்தல் அலுவலகமான வெள்ளலூர் பேரூராட்சி வளாகத்திற்கு வெளியே திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், மறைமுக தேர்தலுக்கான பெட்டியை சாலையில் தூக்கி எறிந்துள்ளனர். இதனால் சட்டம்-ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறிய தேர்தல் நடத்தும் அதிகாரி, தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தார்.
மேலும், இதுகுறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் திமுக, அதிமுகவைச் சேர்ந்த 15 கவுன்சிலர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.