கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பிரம்மாண்டமாக 500 தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் ஆகி உள்ளது.
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் சூர்யா. இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிக்கும் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய திரைப்படங்களுக்கு ஆந்திராவில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தன.
கடந்த 2008-ம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன வாரணம் ஆயிரம். இந்த திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் ஆன ”சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன்” திரைப்படத்தை தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். அதுவும் சுமார் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படத்தை பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். நேற்று காலை அப்படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது.
இதில் பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்புல் ஆகின. புது படத்தை கொண்டாடுவது போல் தியேட்டரில் ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாடும் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன. அதுவும் குறிப்பாக அஞ்சல பாடலுக்கு வைப் ஆன ரசிகர்கள் தியேட்டர் ஸ்கிரீன் முன் கும்பலாக சேர்ந்து குத்தாட்டம் போட்டு மகிழ்ந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள் சூர்யாவுக்கு ஆந்திராவில் இப்படி ஒரு மவுசா என ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.
https://twitter.com/Suriya_offl/status/1687821851073171456?s=20
இந்நிலையில் ரீ-ரிலீஸை கொண்டாடும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ரசிகர்களின் காதல் ஒரு பெரிய ஆச்சரியம்.. ”சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன்” படக்குழுவினருக்கு ஒரு பெரிய நன்றி. எனக்கு மிகவும் பிரமிப்பாக உள்ளது” இவ்வாறு பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடம் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.







