கோடை விடுமுறையை முன்னிட்டு மே 28-ம் தேதி செவ்வாய் கிழமையன்று வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறை தொடங்கியதிலிருந்து மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கும், கோயில்களுக்கும் படையெடுத்து வருகின்றனர். இதனால் அனைத்து சுற்றுலா தளங்கள், கோயில்கள் என அனைத்து பொதுத்தளங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மக்களின் வருகையையொட்டி வரும் செவ்வாய் கிழமையன்று வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது;
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காக வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு வருகை தந்து வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையையொட்டி செவ்வாய்க்கிழமை (மே.28) அன்று வழக்கம் போல் பூங்கா திறந்திருக்கும். வழக்கமான நேரத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். பார்வையாளர்கள் நெகிழி பொருள்களை எடுத்துவர வேண்டாம் என்று பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.