யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு முடிவு வெளியாகியுள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யுபிஎஸ்சி ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகையான உயர் பதவிகளுக்கான பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி, கடந்த 28 ஆம் தேதி யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, தேர்வர்கள் http://www.upsc.gov.in என்ற இணைய தளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் சந்தேகங்களுக்கு 011-23385271, 011-23098543 (அ) 011-23381125 ஆகிய எண்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்கள் மெயின் தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. அதன்படி, மெயின் தேர்விற்கான விண்ணப்பப்பதிவு தேதி உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் இணையத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







