34.5 C
Chennai
June 17, 2024
இந்தியா

உபியில் காதலை கைவிட மறுத்ததால் பெண்ணை உயிரோடு எரித்து கொலை செய்த பெற்றோர்..

முஸ்லீம் மதத்தவரை காதலித்ததற்காக பெண் ஒருவரை அவரது குடும்பத்தினரே உயிரோடு எரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் உத்திர பிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் கோரக்பூரில் உள்ள பெல்காட் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சனா யாதவ். இவர் முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதுதொடர்பாக அரசல் புரலாக பெண் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் ரஞ்சனா யாதவை அழைத்து அந்த காதலை கைவிடும்படி கூறியுள்ளனர். ஆனால், அவர் அதை ஏற்க மறுத்து தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், கடந்த 4ம் தேதி ஜிக்னா (Jigina) பகுதியில் பாதி எரிந்த நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா உதவியுடன் இறந்தது ரஞ்சனா யாதவ் என அடையாளம் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், ரஞ்சனா தனது காதலை விட மறுத்ததால் அவரது குடும்பத்தினரே அவரை உயிரோடு எரித்து கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Leave a Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading