நாட்டில் வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்வு – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

நாட்டில் வரலாறு காணாத வகையில் விலைவாசிகள் உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.   காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தியின் இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை குறித்து தென்…

நாட்டில் வரலாறு காணாத வகையில் விலைவாசிகள் உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

 

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தியின் இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை குறித்து தென் மண்டல கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொள்வதற்காக இன்று காலை தூத்துக்குடி ரயில் நிலையம் வருகை தந்தார். அவருக்கு தூத்துக்குடி மாநகர தலைவர் முரளி தரன் தலைமையில், கட்சியினர் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.எஸ்.அழகிரி, வரும் 7 ம்தேதி கன்னியாகுமரியில் இருந்து ராகுல்காந்தி தனது யாத்திரையை தொடங்க உள்ளர் என்றர்.

 

இந்தியாவை ஒற்றுமைப்படுத்த மக்களை நேசிக்க, எதன் பெயராலும் மக்களை பிரிக்காத வகையில், இந்த பயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இப்பொழுது நாட்டில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கலாச்சாரம் மக்களை பிரிக்க கூடிய ஒன்றாக உள்ளது. நாட்டில் வரலாறு காணாத வகையில் விலை வாசி உயர்ந்து இருக்கிறது. அமெரிக்க டாலர் இப்போது 80 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை விண்ணை தொட்ட நிலையில் உள்ளது. காரணம் பாஜகவின் தவறான பொருளாதார கொள்கை தான்.

விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு வருமானம் தருவதாக மோடி சொன்னார் அதுவும் நடக்கவில்லை. இது அரசாங்கத்தின் தவறு வீழ்ச்சி இதை மக்களிடம் எடுத்து சொல்ல இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. பாஜக சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரப்படுத்தி வருகிறது என செய்தியர்கள் கேள்வி எழுப்பியத்திற்கு, பாஜகவுக்கும் சுதந்திரதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸ் அல்லாத பல கட்சிகள் பங்கெடுத்து இருக்கிறார்கள் என அவர் விளக்கமளித்தார்.

 

பாஜக இப்போதாவது சுதந்திரத்தை கொண்டாடுவது மகிழ்ச்சி. இவ்வளவு காலம் ஏன் பாஜக பங்கெடுக்கவில்லை. சுதந்திர தின நாள் அன்று ஏன் கொடி ஏற்றவில்லை. ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் இதுவரை 2 தடவை மட்டுமே சுதந்திர கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது. ஒன்று நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த போது, பின்னர், வாஜ்பாய் பிரதமராக சென்ற போது இப்போது கொண்டாட கூடிய காரணம் என்ன? அப்போது கொண்டாமல் இருந்த காரணம் என்ன? என பாஜகவிற்கு கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.