மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகஸ்ட் 18ஆம் தேதி நேதாஜியின் நினைவு நாளை குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்ட செய்தியை வாபஸ் பெறவில்லை என்றால் இந்தியா முழுவதும் கருப்பு கொடி காட்டுவோம் என்று பார்வர்டு பிளாக் கதிரவன் எச்சரித்தார்.
இதுகுறித்து அகில இந்திய பவர்வர்டு பிளாக் கட்சி மாவட்டச் செயலாளர் கதிரவன் கூறியதாவது:
அரசுக்குத் தெரியாத செய்தியைத் தவறுதலாக பரப்பி வரும் எல்.முருகன் இந்த செய்தியை வாபஸ் பெற வேண்டும். இல்லை என்றால் இந்தியா முழுவதும் எங்கு சென்றாலும் எல். முருகனுக்கு எதிராக பவர்வர்டுபிளாக் கருப்பு கொடி காட்டப்படும்.
தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேவர் ஜெயந்திக்கு வரும் போது தங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக முத்துராமலிங்க தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுவோம் என கூறினார்.
அதன்படி செயல்படுத்துவார். இல்லையெனில் செயல்படுத்த வைப்போம் என்றார் பவர்வர்டுபிளாக் கதிரவன்.
முன்னதாக, சென்னை செல்வதற்காக அகில இந்திய பவர்வர்டு பிளாக் தேசிய செயலாளர் தேவராஜ் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி நேதாஜி நினைவு நாள் என தெரிவித்து அஞ்சலி செலுத்துவோம் என மக்களுக்கு தவறாக வழி நடத்தியதை கண்டிக்கத்தக்கது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை மட்டும் தான் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நினைவு நாள் யாருக்கும் தெரியாது.
இந்தியாவிலிருந்து ஐந்து மாநிலங்களிலிருந்து பாத யாத்திரையாக சென்று நேதாஜியின் இறப்புக்கு விசாரணை குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து பிரதமரை சந்தித்தோம்.
இதனைத் தொடர்ந்து மனோஜ் குமார் முகர்ஜி ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையிலான குழு அமைத்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் நேதாஜி இருந்த அனைத்து இடங்களிலும் விசாரணை மேற்கொண்டனர்.
தைவான் அரசுக்கு முகர்ஜி கவர்மெண்ட்க்கு கடிதம் அனுப்பியது. அதில் 1945 ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி விமான விபத்தில் நடக்கவே இல்லை. முகர்ஜி விசாரணைக் குழு நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை மத்திய அரசு தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
இவனைத் தெரியாமல் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கட்சியின் கொள்கையும் தெரியாமல், அரசின் நிலைப்பாடு தெரியாமல் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்துவதற்காக இது போன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதனை வாபஸ் பெற வேண்டும்.
இதற்காக இந்தியா மக்களிடையே மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் தேவராஜ்.
தொடர்ந்து சென்னை செல்வதற்கு விமான நிலையத்திற்கு செல்லும் முன்பு விமான நிலைய நுழைவாயிலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நினைவு நாளை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்த மத்திய இணை அமைச்சர் எல். முருகனைக் கண்டித்தும் அதனை வாபஸ் பெற வேண்டுமென பார்வர்டு பிளாக் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.








