வேலை மற்றும் கல்விக்காக போலி சான்றிதழ்களை தயாரிப்பவர்களால், தகுதியானவர்களுக்கான உரிமைகள் கிடைக்காதது துரதிஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
பரோடா வங்கியில் கடந்த 1989 ஆம் ஆண்டு பழங்குடியினர் பிரிவில் வரக்கூடிய காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர் என கூறி அதற்கான ஒதுக்கீட்டில் 1989ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவரின் சாதிச் சான்றிதழ் போலியானது என்று கூறி, ஒட்டர் சமூகத்தை சேர்ந்த அவர் காட்டுநாயயக்கர் என கூறி தாக்கல் செய்த சான்றிதழை ரத்து செய்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாநில குழு உத்தரவிட்டதை எதிர்த்து பெருமாள் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு மற்றும் என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். அதன்படி சான்றிதழ் நிராகரித்தது தவறு. ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்று நீதிபதி நிஷா பானு தீர்ப்பளித்தார்.
சான்றிதழ் நிராகரித்தது சரியே ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டியதில்லை என்று நீதிபதி மாலா தீர்ப்பளித்தார். மேலும் சாதி பேதமற்ற சமுதாயம் என்ற இலக்கை அடைய வேண்டும் என்கிற டாக்டர் அம்பேத்கரின் எதிர்பார்ப்பு இன்னும் கனவாக இருப்பதில் ஆச்சரியமில்லை எனவும் கூறினார். அதோடு, வேலை மற்றும் கல்விக்காக போலி சான்றிதழ்களை தயாரிப்பவர்களால், தகுதியானவர்களுக்கான உரிமைகள் கிடைக்காதது துரதிஷ்டவசமானது நீதிபதி மாலா வேதனை தெரிவித்தார்.