“வீட்டிலிருந்து வெளியே போக முடியாத நிலை” -ஜெயிலர் வில்லன் ஓபன் டாக்…

ஜெயிலர்  படத்தின் வெற்றி குறித்து வில்லனாக நடித்த விநாயகன் பேசிய விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம்…

ஜெயிலர்  படத்தின் வெற்றி குறித்து வில்லனாக நடித்த விநாயகன் பேசிய விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது.
இதுவரை  ஜெயிலர் திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ₹ 640 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில்  650 கோடி கிளப்பில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், படத்தின் வெற்றி குறித்து வில்லனாக நடித்த விநாயகன் பேசிய விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், “ரஜினி சார் நடிக்கிறார் எனத் தெரிந்ததும் ஜெயிலர் கதையைக் கூட முழுமையாகக் கூட கேட்காமல் ஒப்புக்கொண்டேன். வீட்டிலிருந்து வெளியே போகமுடியாத அளவிற்கு இப்படம் வெற்றியைப் பெற்றுள்ளது. கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை. நெல்சன் மிக்க நன்றி. ரஜினி சார் மறக்க மாட்டேன்.” எனக் கூறியுள்ளார்.

https://twitter.com/sunpictures/status/1699294066893348908?s=20

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.