ரஷ்யாவின் 7 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் ராணுவத்தை குவித்தது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவிட்டார். மேலும், உக்ரைன் ராணுவம் தனது ஆயுதங்களை கீழே போட வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் ராணுவத்தை குவித்தது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவிட்டார். மேலும், உக்ரைன் ராணுவம் தனது ஆயுதங்களை கீழே போட வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ரஷ்ய ராணுவ நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க தலைநகர் கீவ் நகரில் வசிக்கும் மக்கள் உக்ரைன் மேற்கு பகுதிக்கு நகர்ந்து வருகின்றனர். இதனால் தலைநகர் கீவ் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கீவ் நகரில் உள்ள சாலைகளில் கார்கள் அணிவகுத்து காத்திருக்கின்றன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.