இளநிலை மருத்துவப் படிப்புக்களுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்றது. 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். தமிழ்நாட்டில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதற்கான விடைக் குறிப்புகள் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி வெளியிடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே மகாராஷ்டிராவில் 2 மாணவர்களுக்கு விடைத்தாள், வினாத்தாள் மாற்றிக் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுபற்றிய வழக்கில், 2 மாணவர்களுக்கும் எம்பிபிஎஸ் படிப்புக்கான நீட் மறுதேர்வை நடத்திய பின்னரே முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற மும்பை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. எனினும், 16லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போத இரண்டு பேருக்காக தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல என்று கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்தது.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள், மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தேர்வு எழுதிய மாணவர்கள், தங்கள் மின்னஞ்சல் மூலம் தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் குறித்த கூடுதல் தகவல்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.