32.5 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் திருப்பம்; 5 பேர் அதிரடியாக கைது

திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவங்களில் 5 பேரை தமிழ்நாடு காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோயில் 10ஆவது தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளை அடித்து சென்றனர். இதேபோன்று தேனிமலை மற்றும் போளூர் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், கலசபாக்கம் பகுதியில் உள்ள இந்தியா ஒன் ஏடிஎம் மையத்திலும் இயந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஒரே இரவில் 4 ஏடிஎம் மையங்களிலும் 80 லட்சம் ரூபாய் வரை கொள்ளை போனதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர் பயன்படுத்திய கார் மற்றும் அதிலிருந்து இறங்கிச் செல்லும் நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

கொள்ளையர்கள் தங்கள் கைரேகை மற்றும் வீடியோ பதிவை காவல்துறையினர் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதற்காக ஏடிஎம் இயந்திரம் மற்றும் சிசிடிவி உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்து சென்றனர். அடுத்தடுத்து நான்கு இடங்களில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளை அடித்து பின்னர் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை தீ வைத்து எறித்துச் சென்றனர். இதில் ஏடிஎம் மையத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின.

இதனையும் படியுங்கள்: மதுரையில் 951 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது

இதனையடுத்து வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள்  இரண்டு பிரிவுகளாக பிரிந்து கொள்ளையில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மேலும் வேலூர் வழியாக, ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட டாடா சுமோ காரை கொள்ளையர்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.  ஆந்திரா , கர்நாடகா மாநில எல்லைகளிலும் போலீசார் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, ஹரியானா மாநிலம் நூக் மாவட்டம் மேவாட் என்ற பகுதியை சார்ந்த கொள்ளை கும்பல்தான் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது என தெரிவித்தார். கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான ஹரியானா மாநிலம், நூக் மாவட்டம் மேவாட் பகுதியைச் சார்ந்த ஹாரிப் , தந்தை பெயர் இலியா என்ற கொள்ளையனை  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஏ டி எஸ் பி விக்னேஸ்வர்யா மற்றும் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா கொண்ட குழுவினர் நேற்று இரவு ஹரியானா மாநிலத்தில் கைது செய்தனர்.

மேலும் ஹரியானா மாநிலத்தில் இரண்டு பேரும், குஜராத் மாநிலத்தில் இரண்டு பேரும்,  நாக்பூரில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அவர்களை தமிழ்நாடு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading