தூத்துக்குடி பனிமய மாதா தேவாலய ஆண்டு திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

தூத்துக்குடி பனிமய மாதா தேவாலயத்தின் ஆண்டு திருவிழாவையொட்டி நடைபெற்ற மாதா சப்பர பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமயமாதா பேராலய தங்க தேர் திருவிழா கடந்த ஜூலை…

தூத்துக்குடி பனிமய மாதா தேவாலயத்தின் ஆண்டு திருவிழாவையொட்டி நடைபெற்ற மாதா சப்பர பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமயமாதா பேராலய தங்க தேர் திருவிழா
கடந்த ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஒவ்வொரு நாளும் சிறப்பு
திருப்பலிகள் நடைபெற்றன.

திருவிழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது பத்தாம் திருநாளான நேற்று இரவு பெருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் மாதாவின் சப்பர பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டு சென்றனர்.

தொடர்ந்து இன்று காலை தங்கத்தேர் திருவிழா சிறப்பு திருப்பலியும் அதன் பின் தங்கத்தேர் பவனியும் நடைபெற உள்ளது இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜாதி மத வேறுபாடு இன்றி கலந்து கொள்வார்கள்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.