திருப்பத்தூரில் மனைவி பிரிந்து வெளிநாடு சென்றதால் மனைவியின் சகோதரியை வசிய
மருந்து ஊற்றி காதல் வலையில் சிக்க வைக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் பகுதியை சேர்ந்தவர்
ராஜேஷ்(22). மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் படித்துள்ளார். இவர் அதே பகுதியை
சேர்ந்த செவிலியரான தேன்மொழி என்பவரை ஒன்றரை வருடத்திற்கு முன்பு காதலித்து
திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதத்திற்கு முன்பு கணவனை பிரிந்து வசித்து வந்த தேன்மொழி செவிலியர் பணிக்காக வெளிநாடு சென்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ராஜேஷ் மனைவி தேன்மொழியின் சகோதரியான தமிழ் மொழி(20) என்பவர் காவல்துறையில் சேர காவல்துறை சார்ந்த வகுப்பிற்கு செல்வதற்காக பூங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ராஜேஷ் கையில் மறைத்து வைத்திருந்த
திரவியத்தை தமிழ் மொழி மீது ஊற்றி உள்ளார்.
உடனடியாக தமிழ் மொழி என் மீது ஏதோ ஊற்றி விட்டார் என கூச்சலிட்டு கதறி உள்ளார். உடனடியாக அங்கிருந்து கிராம மக்கள் ஒன்று கூடி அமிலம் (ACID) இருக்கக்கூடும் என ஆலங்காயம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ் மொழியை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் பரிசோதித்த மருத்துவர்கள் இது அமிலம் அல்ல எண்ணெய் போன்று திரவியம் என்று தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து ராஜேஷை கைது செய்த ஆலங்காயம் போலீசார் அவரிடம்
தீவிர விசாரணை மேற்கொண்டதில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததால் மனைவியின் சகோதரியே காதல் வலையில் சிக்க வைக்க வசிய மருந்து ஊற்றியதாக
ஒப்புகொண்டார். அதன் பேரில் ஆலங்காயம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.