காவல்துறை அதிகாரிகள் 7 பேர் இடமாற்றம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

காவல்துறை அதிகாரிகள் 7 பேரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. ஆக கலைச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக மகேஸ்வரன்…

காவல்துறை அதிகாரிகள் 7 பேரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. ஆக கலைச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக ஆரோக்கியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் – 1 ஆக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில குற்ற ஆவண காப்பகத்தின் எஸ்.பி.யாக நாகஜோதியும், கோவை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக ராஜராஜனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் தெற்கு துணை ஆணையராக மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.