ஒடிசா ரயில் விபத்து – போப் பிரான்சிஸ் இரங்கல்…

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்த நபர்களுக்கு போப் பிரான்சிஸ்  இரங்கல் தெரிவித்து உள்ளார்.  கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது.…

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்த நபர்களுக்கு போப் பிரான்சிஸ்  இரங்கல் தெரிவித்து உள்ளார். 

கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது. இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று மாலை இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் 288 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு மேலும் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, இதுவரை 301 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 160-க்கும் மேற்பட்ட உடல்களை அவர்களது உறவினர்களால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்பு பணிகள் நேற்று நிறைவடைந்த நிலையில், தற்போது தண்டவாளத்தில் இருந்து ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. தண்டவாளத்தை சரி செய்து ரயில் போக்குவரத்திற்கு தேவையான பணிகள் நடைபெற்று வருகின்றன.

https://twitter.com/Pontifex/status/1665327550086914048?s=20

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்த நபர்களுக்கு போப் பிரான்சிஸ் தனது இரங்கலை தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்தனைகள் செய்துகொள்கிறேன், காயமடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். இறந்தவர்களின் ஆன்மா அமைதியடைய வேண்டும் எனவும் புனித போப் பிரான்சிஸ்கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.