விலங்குகள் பலியாவதைக் தடுக்க கோவை – மைசூரு – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கும்படி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் யானைகள் வேட்டையாடுதல், சாலை விபத்தில் பலி போன்றவற்றைத் தடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ் குமார் அமர்வு விசாரித்தது. கடந்த 10 ஆண்டுகளில் மூன்று சிறுத்தைகள் உட்பட 152 வனவிலங்குகள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: 510 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி மதுரை ரயில்வே கோட்டம் சாதனை
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள தெங்குமரஹடா கிராம மக்களை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தெங்குமரஹடா கிராம பகுதியில் 30 சதவீத புலிகள் நடமாட்டம் இருப்பதாகவும், அது வனவிலங்குகளின் இனப்பெருக்க பகுதியாக உள்ளதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.