சென்னை தண்டையார்பேட்டையில் ஒரு டன் தக்காளியை, அதிமுக மாவட்ட செயலாளர் 1000 பேருக்கு இலவசமாக விநியோகம் செய்ததால், பொதுமக்கள் நீண்டவரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.
சென்னை தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெரு பகுதியில்
தக்காளி விலை உயர்வை கண்டித்து 1 டன் தக்காளியை அதிமுக வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் இலவசமாக வழங்கினார்.
இப்பகுதியில் உள்ள பெண்கள் ஆண்கள் முதியோர் உள்ளிட்டோர் வந்து நீண்ட வரிசையில் நின்று தக்காளியை தங்களது வீடுகளுக்கு வாங்கிச் சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது செய்தியாளர்களிடம் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் பேசியதாவது:-
ஆர்.கே.நகர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதி. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பகுதி எங்கெல்லாம், எப்போதெல்லாம் மக்களுக்கு பாதிப்பு வருகிறதோ அப்போதெல்லாம் மக்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுவது தான் அதிமுக. மேலும் மக்களுக்காக 38-வது வட்டத்தில் 500-கிலோ தக்காளி 500-குடும்பங்களுக்கு வழங்கியுள்ளோம். 42-வது வட்டத்தில் 1-டன் தக்காளியை 1000-குடும்பங்களுக்கு வழங்குகிறோம். இனி ஒவ்வொரு வட்டத்திலும், இது மாதிரியான பணிகள் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக அதிமுக. சார்பில் தொடர்ந்து நடைபெறும்.
இது விளம்பரத்திற்காக நாங்கள் செய்யவில்லை கடமை உணர்வோடு செய்கிறோம். இது திமுக ஆட்சிக்கு மக்கள் புகட்ட போகும் பாடம். அன்றைய கொரோனா காலகட்டத்தில் அதிமுக அரசு வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்காக செயல்படக்கூடிய அரசு வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்ட போது, எடப்பாடியார் அரசு சிறப்பாக செயல்பட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் தட்டுப்பாடின்றி மக்களுக்கு குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கியுள்ளோம்.
மளிகை பொருட்கள், காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தக்காளி உற்பத்தியில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில் விலையை கட்டுபடுத்த தவறிவிட்டது. விரைவில் அதிமுக ஆட்சி மீண்டும் அமையும் மக்கள் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரூபி.காமராஜ்