சட்டமன்ற தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு கிடையாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற தங்களுடைய அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சில்லறை வியாபாரிகள் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகின்றனர் ஆன்லைன் வர்த்தகத்தை அரசு நெறிமுறை படுத்தவேண்டும் மேலும் வணிகர்களின் நலன் காக்கின்ற அரசை தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் எங்களது ஆதரவு கிடையாது. நாங்கள் அரசியல் ரீதியான அமைப்பு கிடையாது வணிகர்களின் நலன் சார்ந்த எங்களது பயணம் தொடரும் வணிகர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும். வணிகர்களின் நலன் காக்கின்ற அரசைத் தான் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.







