30.8 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

கட்டட அனுமதிபெற இனி நேரில் செல்லத் தேவையில்லை

கட்டடம் கட்டுவதற்கான அனுமதியைப் பெற பொதுமக்கள் இனி நேரில் வர தேவையில்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பெருநகர குழுமம் மற்றும் நகர்ப்புற ஊரக இயக்ககம் மூலம் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. கட்டடங்களுக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டியிருப்பதால் காலதாமதமும், பொதுமக்களுக்கு அலைச்சலும் ஏற்படுவதாக புகார் எழுந்தது. அனைத்து அனுமதிகளையும் ஒரே நேரத்தில் ஒற்றைச்சாளர முறையில் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை கருத்தில்கொண்டு, தானியங்கி ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதி பெறும் முறையை மே 1ஆம் தேதி முதல் அமல்படுத்த முடிவுசெய்து அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், அடுத்தகட்டமாக பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளிலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.இதனால் மே 1ஆம் தேதி முதல் கட்டடங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்போர் உரிய ஆவணங்களை இணையதளம் மூலமாக சமர்ப்பித்தாலே போதும், நேரில் வரத் தேவையில்லை என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் பதிவு செய்திருந்தால் தானியங்கி முறையிலே அனுமதி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading