முக்கியச் செய்திகள் தமிழகம்

உதகை அருகே உள்ள காவிலோரை கிராமத்தில் புலி நடமாட்டம்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள காவிலோரை கிராமத்தில் புலி நடமாட்டம் தென்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது. இந்த வனப்பகுதியில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. வனப்பகுதிகளிலிருந்து வெளியேறும் வன விலங்குகள் அருகிலுள்ள விவசாய நிலங்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவ்வப்போது உலா வருவது வழக்கம். அவ்வாறு உலா வரும் வன விலங்குகள் சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் கூட நடைபெற்று வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், உதகை அருகே உள்ள காவிலோரைக் கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி ஒன்று அப்பகுதியில் உள்ள விளைநிலத்தில் நடமாடியுள்ளது. இதனை அப்பகுதியில் பணி செய்து கொண்டிருந்த விவசாயிகள் தங்களது செல்போன் கேமிராவில் பதிவுசெய்தனர். பகல் நேரத்தில் கிராமப்பகுதியில் புலி நடமாடி வருவதால், அச்சமடைந்த அப்பகுதி விவசாயிகள் பணிக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் எனவும், அடந்த வனப்பகுதிக்குள் புலியை விரட்ட வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், காவிலோரை மற்றும் சுற்று வட்டார கிராம மக்களுக்கு புலி நடமாட்டம் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிம்புவின் ’பத்து தல’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

G SaravanaKumar

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறை குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் குழு ஆய்வு!

EZHILARASAN D

ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

Web Editor