முக்கியச் செய்திகள்விளையாட்டு

“இது விடைபெறுவதற்கான தருணம்” – டி20 உலகக்கோப்பையை வென்ற பின் ரோகித் சர்மா பேட்டி!

இத்தனை ஆண்டுகள் போட்டிகளை மிகவும் நேசித்து விளையாடியதாகவும், இது விடைபெறுவதற்கான தருணம் எனவும் டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

20 அணிகள் பங்கேற்று விளையாடிய டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் நேற்று நிறைவடைந்தது. பார்படாஸில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி அதிகபட்சமாக 76 ரன்கள் குவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர் முழுவதுமே சரியாக விளையாடாத விராட் கோலி, இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது.

இதன்மூலம் முதல் முறையாக இறுதிபோட்டிக்கு வந்த தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 17 ஆண்டுகால கனவை நினைவாக்கியது இந்தியா. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் தற்போது கோப்பையைக் கைப்பற்றியுள்ளது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

ஒருநாள் உலகக் கோப்பையை இழந்த ரோகித் சர்மா முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்காகவும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்காகவும் வென்று கொடுத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகான இந்தியாவின் இந்த வெற்றியால் நாடே ஆனந்த கண்ணீரில் மூழ்கியது. வெற்றியைத் தொடர்ந்து சர்வதேச டி20 போட்டிகளில் தங்களின் ஓய்வையும் அறிவித்தனர் கிரிக்கெட் ஜாம்பவன்களான ரோகித் மற்றும் கோலி.

தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா, “இது தான் என்னுடைய கடைசி டி20 உலகக் கோப்பை போட்டி. இந்தியாவுக்காக விளையாட தொடங்கியதும் இந்த டி20 போட்டி மூலம் தான். இத்தனை ஆண்டுகள் இந்த போட்டியை மிகவும் நேசித்து விளையாடினேன். இது விடைபெறுவதற்கான தருணம். இந்த கோப்பையை வென்று விட்டு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெற வேண்டும் என விரும்பினேன். அவ்வாறே கோப்பையை வென்று விட்டு விடைபெறுவதில் மகிழ்ச்சி” என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

சாத்தான்குளம் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும்: எம்.பி. கனிமொழி

Vandhana

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருந்து அமமுக விலகல் – டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

G SaravanaKumar

”டைட்டானிக்” ஹீரோயின் மருத்துவமனையில் அனுமதி

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading