புத்தக வாசிப்பை பள்ளி மாணவர்களிடையே ஊக்குவிக்கும் வகையில், கோவை புத்தகக் கண்காட்சியில் 5,000 மாணவர்கள் ஒன்று சேர்ந்து “திருக்குறள் திரள் வாசிப்பு” நடத்தப்பட்டது.
கோவை கொடிசியா வளாகத்தில் கோயமுத்தூர் 6வது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் 7வது நாளான இன்று பள்ளி மாணவ, மாணவிகள் 5 ஆயிரம் பேர் பங்கேற்ற “திருக்குறள் திரள் வாசிப்பு” நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 5,000 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மாணவ, மாணவிகள் அனைவரும் கொடிசியா ஹாலில் அமர வைக்கப்பட்டனர். திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தில் இருந்தும் 2 குறள்கள் என 20 குறள்களை அனைத்து மாணவ, மாணவிகளும் வாசித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருக்குறள்களை மாணவ, மாணவிகள் சொல்லும்போது, ஆசிரியர்கள் அந்தத் திருக்குறளுக்கு விளக்கம் அளித்தனர். மாணவர்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக திருக்குறள் திரள் வாசிப்பு நிகழ்ச்சியானது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த திருக்குறள் திரள் வாசிப்பில் மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் தமிழறிஞர்கள், புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
-ம.பவித்ரா