சென்னையில் குடிநீர் தேவைக்கு 200 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையாக இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயில் குளத்தை சீரமைக்கும் பணிகளுக்கு, அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு ஆகியோர் அடிக்கல் நாட்டினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சிங்காரச் சென்னை திட்டத்திற்கு நடப்பாண்டில், 500 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், குளத்தை சீரமைத்து குளத்தில் அருகில் உள்ள சாலைகளில் வரும் மழை நீரை
சுத்திகரித்து குளத்திற்கு கொண்டு வர வழிவகை செய்து இருப்பதாக கூறினார்.
அண்மைச் செய்தி: எடப்பாடி பழனிசாமிக்கு சம்மனா? இன்று முடிவு
இந்த பணியை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை நிர்வாகத்துறை தற்போது அனுமதி அளித்திருப்பதாகவும் ஒரு மாதத்தில் அந்த பணிகள் முடிந்துவிடும் என
தெரிவித்தார். அதேபோல் நீர் ஏற்ற நிலையங்களில் பழுதாக உள்ள மோட்டார்களில் முதற்கட்டமாக 60 மோட்டார்களை மாற்றி நீர் ஏற்றும் வகையில் தயார் செய்து இருப்பதாகவும், தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் சமச்சீராக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1,100 மில்லியன் லிட்டர் நீர் தேவைப்படும் நிலையில், தற்போது 900 மில்லியன் லிட்டர் நீர் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்தார். இதனைதொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 538 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளதாகவும், அதற்காக சாலைகளில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கே.என்.நேரு குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.