தேனி அருகே தவறான தொடர்பின் காரணமான கணவனை கொலை செய்த மனைவி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி ராமர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் கடந்த 24ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் சிவக்குமாரின் மனைவி பாப்பாத்திக்கும் செல்வராஜ் என்பவருக்கும் இடையே தவறான தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதனால் பாப்பாத்தி, செல்வராஜ் மற்றும் செல்வராஜின் நண்பர் அய்யனார் ஆகிய மூவரும் திட்டம் தீட்டி விபத்தை ஏற்படுத்தி சிவக்குமாரை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பாப்பாத்தி, செல்வராஜ், அய்யனார் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்