வானூர் அருகே தான் சொந்த கிராமத்திற்கு சுமார் 10.5 லட்சம் ரூபாய் செலவில் சிமெண்ட் சாலை அமைத்துக் கொடுத்த இளைஞரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் – லட்சுமியின் இளைய மகன் சந்திரசேகர் சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கொரோனா தொற்றின்போது கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு விதிகளின் காரணமாக சந்திரசேகர் தன் கிராமத்திற்குச் சென்று வீட்டிலிருந்தபடியே தன் பணியினை செய்து வந்துள்ளார். இந்நிலையில், அங்குப் பெய்த கன மழையின் போது கிராமத்தில் உள்ள ஒரு சாலை மிகவும் சேரும் சகதியுமாக இருந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனைப் பார்த்த சந்திரசேகர் அதிர்ச்சி அடைந்து, உடனே வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குச் சென்று தன் கிராமத்தில் நிலவரத்தை எடுத்துக்கூறி சாலை அமைத்துத் தர வேண்டுமென மனு அளித்துள்ளார். இதற்கு அரசு அதிகாரிகள் தற்போது எதுவும் நிதி இல்லை எனக் கூறியுள்ளனர். அப்போது அதிகாரிகளிடம் இந்த சாலைக்கு எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்டுள்ளார். அதன்பிறகு இந்த செலவைத் தானே செய்து, தனது கிராமத்திற்குச் சாலை அமைத்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். அதற்கு, மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டுமென அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மைச் செய்தி: ‘‘அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும்’ – சென்னை உயர் நீதிமன்றம்’
அதன்படி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் அனுமதி பெற்ற அவர், சுமார் 14 அடி அகலமும் 270 மீட்டர் தூரம் கொண்ட சிமெண்ட் சாலையை சுமார் 10.50 லட்சம் செலவில் தன் சொந்த பணத்தைச் செலவிட்டு சிமெண்ட் சாலை அந்த இளைஞர் அமைத்துள்ளார். இளைஞரின் இந்த செயலை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அவரை வெகுவாக பாராட்டி, நன்றி தெரிவித்து வருகின்றனர்.