அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்திருப்பதால், அதனை தடுக்கும் நோக்கில் வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அரை சதவீதம் உயர்த்தக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்து 81 ரூபாய் 55 காசுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது. 81 ரூபாய் 9 காசுகளாக இருந்த மதிப்பில் மேலும் 46 காசுகள் சரிந்து இந்த அளவுக்கு கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது கடந்த இருபது ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும் கடும் பணவீக்கத்துக்கு மத்தியில் கடும் அழுத்தத்தில் உள்ள இந்திய ரூபாயின மதிப்பு இன்னும் வீழ்ச்சியை சந்திக்கக் கூடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரம் நடைபெறவுள்ள ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கமிட்டிக் கூட்டத்தில் வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் அரை சதவீதம் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, சர்வதேச பங்கு சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.